ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக படங்களின் படப்பிடிப்பையும் நடத்தக் கூடாதென நிறுத்தி வைத்திருந்தார்கள். சில படங்களுக்கு மட்டும் நேற்று வரை சிறப்பு அனுமதி வழங்கியிருந்தார்கள். அதன்படி விஜய் படம், நாடோடிகள் 2 உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்பை நடத்தி முடித்தார்கள்.
இதனிடையே, விஜய் சேதுபதியின் மைத்துனர் ராஜேஷ் தயாரிக்கும் 'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சில தினங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளனர். இது குறித்து திரையுலகத்தைச் சார்ந்த பலரும் அவர்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் சங்கம் அந்தப் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்திருக்கிறது. படக்குழுவினர் தரப்பில் விசாரித்தால் அனுமதி பெற்றுவிட்டுத்தான் படப்பிடிப்புக்குச் சென்றுள்ளதாகச் சொல்கிறார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் 23ம் தேதிக்குப் பிறகு யாருக்கும் அனுமதி தரவில்லை என்கிறார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தை மதிக்காமல் படப்பிடிப்புக்குச் சென்ற விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை.