பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காலா, 2.O படங்களை முடித்துவிட்ட ரஜினி, அரசியல் தொடர்பான வேலைகளில் பிஸியாக உள்ளார். மாவட்டம் வாரியாக நிர்வாகிகளை நியமித்து வருகிறார். மற்றொருபுறம், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கவும் தீவிரம் காட்டி வருகிறார்.
இப்படம் தொடர்பாக ரஜினியை, போயஸ் இல்லத்தில் நேற்று சந்தித்து பேசியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். 1 மணிநேரம் நடந்த இந்த சந்திப்பில் படத்தின் கதை குறித்து முழுமையாக விவாதித்தாக தெரிகிறது. ஹீரோயின், மற்ற டெக்னீஷியன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஸ்டிரைக்கு நடந்து வருவதால் அது முடிந்ததும் பட வேலைகள் துவங்க உள்ளன.
ரஜினி அரசியல் களத்தில் இறங்குவதால் அதை கருத்தில் கொண்டு, அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கதையை உருவாக்கி இருக்கிறாராம் இயக்குநர். அதனால் படத்தில் அரசியல் தொடர்பான பஞ்ச் வசனங்களும், அதிகம் இருக்கும் என தெரிகிறது.