பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து புகழ் பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதையடுத்து பல படங்களில் நடித்த அவர், தற்போது தனுசுடன் வடசென்னை, விக்ரமுடன் துருவ நட்சத்திரம், மணிரத்னத்தின் செக்கச்செவந்த வானம் என மெகா படங்களாக நடித்து வருகிறார்.
இந்த படங்கள் பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், வடசென்னை படத்தில் ஸ்லம் பெண்ணாக நடித்துள்ளேன். நானும் சென்னை பெண் என்பதால் சென்னை தமிழ் பேசி நடிப்பதில் கஷ்டம் தெரியவில்லை.
கெளதம்மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் சில நாட்களாக நடிப்பதில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. பின்னர் அவரது ஸ்டைலுக்கு என்னை மாற்றிக்கொண்டு நடித்தேன். இப்போது பழகி விட்டது.
மணிரத்னம் படத்தில் நடிப்பது என கேரியரிலேயே பெரிய விசயமாக கருதுகிறேன். இந்த படத்தில் என் வேடம் என்ன என்பது பற்றி சொல்ல முடியாது. அவரது படத்தில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று என்னை அழைத்திருந்தாலும் மறுக்காமல் நடித்திருப்பேன். இந்த படத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வேடத்தை மணிரத்னம் கொடுத்திருக்கிறார் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.