பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
முன்னணி ஹீரோக்களுடன் நடித்து சீக்கிரமே முன்னணி நடிகையாகி விட வேண்டும் என்கிற நோக்கம் இல்லாமல், அழுத்தமான கதாபாத்திரங்களுக்கு முதலிடம் கொடுத்து நடித்து வருபவர் சாய் பல்லவி.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஒரு சிறுமிக்கு அம்மாவாக அவர் நடித்துள்ள கரு படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இதையடுத்து சூர்யாவுடன் என்ஜிகே மற்றும் தனுசுடன் மாரி-2 படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் எந்த நடிகைகளையும் போட்டியாக நினைக்கவில்லை. எனது பலம், பலவீனம் எனக்கு நன்றாக தெரியும். நான் எல்லாவிதமான வேடங்களுக்கும் பொருந்த மாட்டேன். அதனால் எனது எல்லைக்குள் நின்று நடித்து வருகிறேன் என்கிறார் சாய் பல்லவி.