ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பாக கடந்த 16ம் தேதி முதல் தமிழ்நாடு அரசிடம் கேளிக்கை வரி, லைசன்ஸ் புதுப்பிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தியேட்டர்களை மூடி ஸ்டிரைக்கை ஆரம்பித்தார்கள்.
சில தினங்களுக்கு முன் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தார்கள். முதல்வரும் ஆவன செய்வதாக சொன்னார் என முதல்வரைச் சந்தித்து விட்டு வந்த நிர்வாகிகள் தெரிவித்தார்கள்.
இதனிடையே, நேற்று மாலை தமிழ்நாடு அரசின் அமைச்சர்களைச் சந்தித்த திரையரங்கு உரிமையாளர்கள், அவர்களது ஸ்டிரக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். அரசாங்கம் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்வதாக தெரிவித்துள்ளார்கள், அதனால் ஸ்டிரைக்கை வாபஸ் பெறுகிறோம் என்றார்கள்.
அரசு தரப்பிலிருந்து திரையரங்கு உரிமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தான் அவர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவரான அபிராமி ராமநாதன், இந்த ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளவேயில்லை. ஆனால், அவர்தான் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஸ்டிரைக்கை வாபஸ் பெறுகிறோம் என்று சொன்னார். ஸ்டிரைக்கில் கலந்து கொள்ளாதவர் எதற்காக இதை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் கேட்கிறார்கள்.
புதிய படங்களே இல்லாத நிலையில் நாங்கள் எப்படி தியேட்டர்களைத் திறந்து படத்தை ஓட்டுவது என்ற மற்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.