பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
வித்தியாசமான கதைக்காகவே தற்போது 'கம்மர சம்பவம் என்கிற படத்தில் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார் மலையாள நடிகர் திலீப். அதேசமயம் வழக்கமான தனது பாணியில் குழந்தைகளை டார்கெட் பண்ணி, 'புரபெசர் டிங்கன்' என்கிற படத்திலும் நடிக்கிறார் மலையாள நடிகர் திலீப்.
ரபி மெக்கார்டின் கதை எழுதும் இந்தப்படத்தில் மேஜிக் மேனாக நடிக்கிறார் திலீப். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்திருந்த சமயத்தில் தான் நடிகை விவகாரத்தில் கைதாகி சிறை சென்றார் திலீப். 'கம்மர சம்பவம்' படத்தின் டப்பிங்கை முடித்ததும் இந்தப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்காக துபாய் செல்ல முடிவெடுத்துள்ளார்கள்.
அதேசமயம், இந்தப்படத்தில் இதுவரை எடுத்தவரைக்குமான காட்சிகள் திருப்தியாக இல்லாததால் அவற்றை மீண்டும் படமாக்கும்படி சொல்லிவிட்டாராம் திலீப். சுமார் 125 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.