டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் திரையுலகம் நடத்திவரும் ஸ்டிரைக்கை மீறி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் உட்பட 4 படங்களுக்கு மட்டும் படப்பிடிப்பு நடத்த சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது, தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“சென்னையில் நடந்த சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் 16-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனால் செட் அமைத்து ஏற்கனவே படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த சில படங்களின் படப்பிடிப்புகளை கூடுதலாக ஓரிரு நாட்கள் நடத்த அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி 4 படங்களின் படப்பிடிப்பை தொடர அனுமதி கேட்டு சங்கத்தில் அதன் தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தனர். அதன்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என்று தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் துரைராஜ் அளித்த விளக்கத்தை தயாரிப்பாளர்கள் ஏற்கவில்லை.
சில தயாரிப்பாளர்கள் பகிரங்கமாகவே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஸ்டிரைக் நேரத்தில் விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற சர்ச்சை ஓய்வதற்குள் விஜய்சேதுபதி நடிக்கும் ஜுங்கா படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
விஜய் சேதுபதி, சாயிஷா, இயக்குநர் கோகுல், ஒளிப்பதிவாளர் உட்பட பலர் சென்றுள்ளனர். அங்கு 10 நாட்கள் படப்பிடிப்பு நடக்கிறது. ஸ்டிரைக் நடக்கும் நேரத்தில் இவர்கள் இப்படி சென்றது, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் படத்துக்கு சிறப்பு அனுமதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாகவே ஜுங்கா படப்பிடிப்பை நடத்தும் முடிவுக்கு விஜய்சேதுபதி வந்ததாக படக்குழுவினர் சொல்கின்றனர்.