பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் சுரேஷ்கோபி, பார்த்திபன் இருவரையும் வைத்து 'மேல்விலாசம்' என்கிற படத்தை எடுத்து சாதனை படைத்தவர் தான் இயக்குனர் மாதவ் ராமதாசன்.. என்ன சாதனை என்றால் வெறும் பத்து, பதினைந்து கேரக்டர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரே ஒரு கோர்ட் ஹாலில் மொத்தப்படமும் ஒரு விசாரணை (கோர்ட் மார்ஷியல்) வடிவில் நகர்வதாக படமாக்கி இருந்தார் மாதவ் ராமநாதன்.
அதை தொடர்ந்து சுரேஷ்கோபி, ஜெயசூர்யா இருவரையும் வைத்து மருத்துவமனை முறைகேடுகளை மையப்படுத்தி 'அப்போதேகேறி' என்கிற படத்தை இயக்கினார். அடுத்தததாக இப்போது 'இளையராஜா' என்கிற படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு ஒன்றை டைட்டில் போஸ்டருடன் வெளியிட்டுள்ளார் மாதவ் ராமநாதன்
சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் ஜெயசூர்யா ஹீரோவாக நடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்தப்படம் ஏப்ரலில் துவங்க இருக்கிறது.