'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.ஈ.ஞானவேல்ராஜா. அவருடைய மனைவி நேஹா ஞானவேல் ராஜா, சி 3 படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணி புரிந்தவர். நடிகைகளைப் பற்றி அவர் பதிவிட்ட சில டுவீட்டுகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. அதையடுத்து அந்த டுவீட்டுகளை அவர் நீக்கிவிட்டார். அதன் பின் அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
“சில நடிகைகள் குடும்பத்தை உடைப்பவர்கள், அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களை விட மோசமானவர்கள். பொதுவாகச் சொல்லவில்லை, அது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும். சில நடிகைகள் திருமணமான ஆண்களைத்தான் குறி வைக்கிறார்கள், படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்கும் தயாராக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய பட்டியலை வைத்திருக்கிறேன். விரைவில் அவர்களை வெளியேற்றுவேன்,” என பதிவிட்டிருக்கிறார்.
அது உடனே, அவருக்கே எதிராகவே திரும்பியிருக்கிறது. பலரும் அவருடைய கணவருக்கு அப்படி நடந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதன் பின் அந்த டுவீட்டுகளை அவர் நீக்கிவிட்டிருக்கிறார்.
பின்னர் விளக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், “சில சென்சிட்டிவ்வான விஷயங்கள் பொழுதுபோக்குக்காக அல்ல. நான் பதிவிட்டது, என்னுடைய பிரச்னை அல்ல. எனக்கும், என் கணவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அது என்னைச் சுற்றி பலருக்கு நடக்கும் விஷயங்கள். அந்த மோசமானவர்கள் திருமணமானவர்களின் வாழ்க்கையுடன் தொடர்ந்து விளையாடுகிறார்கள்.
ஒரு பெண் இதைப் பற்றியெல்லாம் வெளிப்படையாகப் பேசினால், அதை மக்கள் லீக் என்கிறார்கள். இங்கு எந்த ஒரு நாடகத்தையும், கவனத்தையும் ஈர்க்க நான் இல்லை. பெண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இங்கு பதிவிடுவதால் எந்த நல்லதும் நடக்கப் போவதில்லை, அதனால் அவற்றை நீக்குகிறேன். எனது கணவரைப் பற்றிய சில கமெண்ட்டுகள் பாதிக்கிறது.
இந்த சென்சிட்டிவ்வான பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவற்றை நீக்குகிறேன். ஆனால், இப்படி ஷோ காட்டும் பெண்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாக போய்ச் சேரும். சமூக வலைத்தளம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. எனவே, நல்ல வழியில் ஆதரவு கொடுங்கள்,” என விளக்கம் கொடுத்திருக்கிறார்.