நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் |
எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களிலும் விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்துடன் பிரமாண்டமாக வெளியானது. இந்திய அளவில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட அப்படம் உலக அளவிலான ரசிகர்களை கவர்ந்தது. இப்போதுவரை உலகின் பல மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், ராஜமவுலியின் அடுத்த படம் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிப்பில் தயாராக உள்ளது. அப்படத்திற்கான பிரீ புரொடக்சன்ஸ் வேலைகளை தொடங்கியுள்ள ராஜமவுலி, இந்த படத்தில் விஎப்எக்ஸ் இடம்பெறாது என்று தான் முதலில் கூறி வந்தார்.
இப்போது பாகுபலிக்கு இணையாக விஎப்எக்ஸ் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்திருப்பவர், சர்வதேச அளவிலான விஎப்எக்ஸ் தொழில்நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்தப்படத்தை ரூ.300 கோடியில் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம் ராஜ மவுலி.
அக்டோபரில் படப்பிடிப்பை ஆரம்பித்து, 2020-ல் வெளியிட திட்டமிட்டுள்ளார்.