இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள், கடந்த ஜன., 25-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பத்மவிருதுகள் வழங்கும் விழா, புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(மார்ச் 20) மாலை நடந்தது. ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது வழங்கி கவுரவித்தார்.
தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா, 1976-ம் ஆண்டு அன்னக்கிளி படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானானர். அப்போது ஆரம்பித்த ராஜாவின் இசைபயணம், ஆயிரம் படங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.