பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பொதுவாக நடிகைகளுக்கு திருமணமாகி விட்டால் அவர்களுக்கு படமே இல்லாத நிலை ஏற்படும். இன்னும் சிலருக்கு மார்க்கெட் மந்தமாகி விடும். ஆனால் சமந்தாவோ திருமணத்திற்கு பிறகுதான் ரொம்ப பிசியாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் கதாநாயகி, கதையின் நாயகி என நடித்துக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், சாவித்ரியின் வாழ்க்கை கதையில் உருவாகியுள்ள மகாநதி படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிருபர் வேடத்தில் நடித்திருக்கிறார் சமந்தா. இந்த படத்தில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நிடித்து முடித்து விட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ள சமந்தா, சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பது பெருமையான விசயம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதத்தில் மட்டும் 3 படங்களில் நடித்து முடித்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதாவது, மகாநதி, சீமராஜா, ரங்கஸ்தலம் ஆகிய படங்களில் நடித்து வந்தவர், இந்த மாதத்தோடு இந்த மூன்று படங்களையும் முடித்துவிட்டார்.