டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் |
நடிகை விவகாரத்தில் சிறை சென்று திரும்பியபின் முழு மூச்சாக தனது 'கம்மர சம்பவம்' படத்தில் நடித்து வருகிறார் திலீப். இந்தப்படத்தில் 9௦ வயது கிழவர் உட்பட மூன்று வேடங்களில் நடிக்கிறார் திலீப். இதில் இந்த கிழவர் வேடத்திற்கான மேக்கப்பிற்கு மட்டும் தினசரி 5 மணி நேரம் செலவானதாம்.
அதேப்போல இன்னொரு வேடத்தில் நன்கு அடர்த்தியாக வளர்ந்த தாடியுடன் பல காட்சிகளில் நடிக்கவேண்டி இருந்ததாம். தாடி இல்லாமல் இருக்கும் காட்சிகளை படமாக்கி முடித்த சமயத்தில் தான் வழக்கில் சிக்கி கைதாகி சிறை சென்றார் திலீப்..
கிட்டத்தட்ட எண்பது நாட்கள் சிறைவாசத்தில், திலீப்பின் தாடி அடர்த்தியாக வளர்ந்து இருந்தது, இந்தப்படத்தில் அவரது கேரக்டருக்கு ரொம்பவே உதவியாக மாறிவிட்டது. சிறையிலிருந்து வெளியான பின்னரும் திலீப் நீண்ட நாட்களாக தாடியை எடுக்காமல் வலம் வந்ததற்கு காரணம் 'கம்மர சம்பவம்' படமும் அவரது கேரக்டரும் தானாம்.