டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜமீன்கோட்டை, குடும்ப சங்கிலி படங்களை இயக்கிய ராம்சந்தர் இயக்கும் புதிய படம் விசாகபட்டினம் 1+3=1. சிவசூர்யா மூவீஸ் சார்பில் பி.ஏழுமலை தயாரிக்கிறார். ராகுல், லிசா, சவுமியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். விஜய்ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், ஆதீஷ் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் ராம்சந்தர் கூறியதாவது:
இதுவரை யாரும் தொட்டிராத புதிய கதை களம் இது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள் கொண்டு வரும் 3 பேரும் அடுத்தடுத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களை கொன்றது யார்? அதற்கான காரணம் என்ன? என்கிற பகீர் தவல்களை சொல்லும் படம். இந்த கொலைகள் பற்றி காவல்துறை துப்பு துலக்குவதுதான் திரைக்கதை. முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகி உள்ள க்ரைம் த்ரில்லர் படம். முழு படமும் விசாகப்பட்டினத்திலேயே படமாகி உள்ளது. என்றார்.