ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ள ரஜினிகாந்த், தனது ஆன்மிக குருக்களிடம் ஆசி பெறவும், பாபாவை வழிபடவும் இமயமலைக்கு சென்றார். தனது ஆன்மிக சுற்றப் பயணத்தை முடித்து கொண்டு இன்று மாலை சென்னை திரும்புகிறார். கட்சி பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை அவர் முடிவு செய்து விட்டு வந்திருப்பதாக கூறுகிறார்கள்.
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மாவட்ட வாரியாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வருகிற 5 நாட்களுக்கு நடக்கிறது. இது முடிந்த பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் ரஜினி விரைவில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
அதன் பிறகு திட்டமிட்டமிட்டபடி இம்மாத இறுதியில் உடல் பரிசோனைக்காக அமெரிக்கா செல்கிறார். எம்.ஜி.ஆர் அமெரிக்க சிகிச்சை முடிந்து திரும்பியபோது மக்கள் கொடுத்த வரவேற்பு போன்று இந்த முறை ரஜினியை வரவேற்க பெரும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், ஏப்ரல் 14ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று சென்னையில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கட்சி பெயர், கொடி, சின்னத்தை அறிவிப்பார் என்றும் ரஜினி மக்கள் மன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.