தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பன்னீர் புஷ்பங்கள், சிவப்பு மல்லி, சின்ன முள் பெரிய முள், நம்பினால் நம்புங்கள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல் உள்பட பல படங்களில் நடித்தவர் சாந்தி கிருஷ்ணா. தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஏராளமான மலையாளப் படங்களில் நடித்தார்.
சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த சாந்தி கிருஷ்ணா, தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். நிஜண்டுக்குளடே ஒரு இடவேள என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அரவிந்திண்ட அதிதிங்கள், குற்றமுடன் மரப்ப்பா போன்ற மலையாள படங்களில் நடிக்கிறார். இதுதவிர கிரிஷ்ணம் என்ற பெயரில் தமிழ், மலையாளத்தில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். இதன் மூலம் தமிழுக்கு மீண்டும் வருகிறார் சாந்தி கிருஷ்ணா.
பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் படம் “கிரிஷ்ணம்”. இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில சம்பவங்களே “கிரிஷ்ணம்” படத்தின் கதை. திரைக்கதை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இதில் நாயகன் அக்ஷய் கிருஷ்ணனின் தாயாக நடிக்கிறார் சாந்தி கிருஷ்ணா.