ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் மார்ச் 16ம் தேதி முதல் மூடப்படும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால், சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தியேட்டர்களை திறந்து வைப்போம் என அறிவித்தார்கள்.
அதனால், சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் மற்றும் இரண்டு, மூன்று தியேட்டர்கள் உள்ள வளாகங்கள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் மிக மிகக் குறைவான அளவே ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். அதேசமயம், சென்னையிலும் பல சிங்கிள் தியேட்டர்கள் இரண்டு வாரங்களாகவே மூடிக் கிடக்கின்றன.
சென்னையைத் தவிர மாநிலத்தின் பிற பகுதிகள் சில ஊர்களில் மட்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சுமார் 1100 தியேட்டர்களில் 300 தியேட்டர்கள் வரை திறந்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் பழைய படங்கள், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன.
தமிழக மக்களும் தியேட்டர்களுக்குச் செல்வதை ஏறக்குறைய மறந்துவிட்டது போலவே தோன்றுகிறது. முழு ஆண்டு தேர்வு நடந்து வருவதே அதற்குக் காரணம். அனைத்துத் தேர்வுகளும் ஏப்ரல் 20 வரை நடக்க உள்ளது. அதனால், அதுவரை யாரும் சினிமா என்பதை நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.
புதிய படங்கள் வந்தால் மட்டுமே மக்கள் மீண்டும் தியேட்டர்கள் பக்கம் வருவார்கள். அந்த சமயத்தில் 'காலா' போன்ற படங்கள் வந்தால்தான் தியேட்டர்களுக்கும் புத்துயிர் கிடைக்கும். தற்போது நடைபெறும் போராட்டமும் ஏப்ரல் வரை தாராளமாகச் செல்லும் என்கிறார்கள். இப்போது பெயரளவிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ள தியேட்டர்கள் கூட இன்னும் சில நாட்களுக்குள் மூடப்படலாம் என்றே தெரிகிறது.