விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின், அதன்பிறகு தனது தம்பி ஆதித்யா இயக்கிய சவரக்கத்தி படத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து தற்போது தனது புதிய படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கியிருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. சாந்தனு நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் நாயகியாக நடிப்பது குறித்து இன்னும் மிஷ்கின் எந்த தகவலும் வெளியிடவில்லை. ஆனால் நித்யாமேனன், சாய் பல்லவி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
விஜய்யின் மெர்சல் படத்திற்கு பிறகு அவே தெலுங்கு படத்தில் நடித்த நித்யாமேனன், இந்த படத்திலும் ஒரு அழுத்தமான வேடத்தில் நடிக்கிறாராம்.
அதேபோல் கரு படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ள சாய் பல்லவியும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.