ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் முக்கியமான நாயகன் சிவகார்த்திகேயன். படத்திற்குப் படம் மிகவும் கவனமாக அடியெடுத்து வைக்கிறார். தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இப்படத்திற்குப் பிறகு 'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
ரவிகுமார் இயக்கும் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன், 'சிவா மனசுல சக்தி' இயக்குனர் ராஜேஷ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ் விரைவில் சந்தானம் நாயகனாக நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் படத்தை அவர் இயக்குவார் எனத் தெரிகிறது. அதற்குள் சிவகார்த்திகேயனும் ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் படத்தை முடித்துவிடுவார்.
ஒரு கலகலப்பான கமர்ஷியல் படம், ஒரு வித்தியாசமான சீரியசான படம் என மாறிமாறி நடிக்க சிவகார்த்திகேயன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. கமல்ஹாசனின் சக்சஸ் பார்முலா இதுதான். அதையே சிவகார்த்திகேயனும் பின்பற்றுவது போல் உள்ளது.