சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கடும் எதிர்ப்புக்கு இடையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் பத்மாவத். இந்தப்படத்தில் தீபிகா படுகோனே சித்தூர் ராணி பத்மாவதி கேரக்டரில் நடித்திருந்தார். அப்போது அவர் அணிந்து நடித்த நகைகள், உடைகள் வடநாட்டு மக்களை பெரிதும் கவர்ந்தது.
குறிப்பாக ராஜஸ்தான் பெண்கள் அதனை பெரிதும் விரும்பினார்கள். படப்பிடிப்பில் தீபிகா படுகோனே 35 கிலோ எடை வரையிலான நகை, புடவைகள் அணிந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது வடநாட்டு நகை கடைகளில் பத்மாவதி கலெக்ஷன் என்ற தனி பிரிவை தொடங்கியிருக்கிறார்கள். தீபிகா படுகோனே நடித்த காட்சிகளை புகைப்படங்களாக வைத்து அதில் அவர் அணிந்திருந்த நகைகளை அருகில் காட்சிப்படுத்தி விற்பனை செய்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் பேன்சி நகை கடைகள், கவரிங் நகை கடைகளிலும் பத்மாவதி நகைகள் விற்கப்படுகிறது. மக்களின் ஆர்வத்தை கண்டு நகை வியாபாரிகளும் பத்மாவதி நகை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
"படத்தின் வசூலை விட பத்மாவதி நகை வியாபாரம் அதிக அளவில் நடக்கும்" என்று வடநாட்டு நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். பத்மாவதியின் நகைகளுக்கு தென்னிந்தியாவில் வரவேற்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.