இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
தமிழ்த் திரையுலகத்தில் இன்று முதல் முழுமையான வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளது. இத்தனை நாட்களாக புதிய படங்களை வெளியிடுவதை மட்டுமே தயாரிப்பாளர்கள் நிறுத்தினார்கள். அதைத் தாங்க முடியாமலே பல தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டன.
சென்னையில் உள்ள தியேட்டர்களும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களும் மட்டுமே இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் படங்களைப் பார்க்க வருபவர்கள் மூலம் கிடைக்கும் வசூலை வைத்து மின்சாரக் கட்டணத்தைக் கூடக் கட்ட முடியாது. இந்த வேலை நிறுத்தப் போராட்டம் விரைவில் நல்லவிதமாக முடிவுக்கு வர வேண்டும் என்று தான் பலரும் விரும்புகிறார்கள்.
ஏப்ரல், மே மாதங்களில் பல படங்கள் வெளியீட்டிற்காகக் காத்திருக்கின்றன என்பது தான் அதற்குக் காரணம். இந்தப் படங்களின் வெளியீட்டை தயாரிப்பாளர் சங்கம் எப்படி முறைப்படுத்தப் போகிறது என்பது தான் அடுத்து எழும் பெரிய கேள்வியாக இருக்கும்.
“காலா, விஸ்வரூபம் 2, மெர்க்குரி, மிஸ்டர் சந்திரமௌலி, மோகினி, கரு, டிக் டிக் டிக், நரகாசூரன், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், இரும்புத் திரை, அசுரவதம், காளி, பரியேறும் பெருமாள், ஆண் தேவதை, அபியும் அனுவும், களரி, காத்திருப்போர் பட்டியல், கோலமாவு கோகிலா, கோலி சோடா 2, கீ, இரவுக்கு ஆயிரம் கண்கள், பாஸ்கர் ஒரு ராஸ்கல், சர்வர் சுந்தரம், குப்பத்து ராஜா, ஆர்.கே.நகர், பார்ட்டி, கடைக்குட்டி சிங்கம், தமிழ்ப் படம் 2.0, இமைக்கா நொடிகள்” என 30க்கும் மேற்பட்ட படங்கள் அடுத்த இரண்டு மாத வெளியீட்டிற்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
இது தவிர இடையில் சில படங்களின் செருகல் வேலைகளும் நடக்கலாம். அவை திடீரென களத்தில் குதிக்கவும் வாய்ப்புண்டு. அப்படிப்பட்ட படங்களை தயாரிப்பாளர்கள் சங்கம் இப்போதே தடுக்க வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர் சங்கத்தின் போராட்டத்திற்கு ஆதரவுளிக்கும் படங்களை வெளியிடக் காத்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும்.