‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மோகன்லால் மகன் பிரணவ், கதாநாயகனாக அறிமுகமான 'ஆதி' படம் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்ததாக 'ராம்லீலா' பட இயக்குனர் அருண் கோபி டைரக்சனில் நடிக்க இருக்கிறார். முதல் படத்தில் இவருக்கு ஜோடியே இல்லாமல் படத்தை முடித்துவிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.
ஆனால் இந்தப்படம் ரொமாண்டிக் வகையில் உருவாக இருப்பதால் பிரணவுக்கு திறமையுடன் கூடிய அழகான ஹீரோயின் ஒருவரை தேடிவருகிறார் இயக்குனர் அருண்கோபி. ஆனால் அது புதிய ஹீரோயினாக இருக்க வேண்டும் என்பதால் அதற்காக ஆடிசன் நடத்தவுள்ளார்கள்.
முதற்கட்டமாக துபாயில் வரும் மார்ச்-22, 23 ஆகிய தேதிகளில் ஆடிசன் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இதில் அவர்கள் எதிர்பார்த்த கதாநாயகி அமையாவிட்டால், இதை தொடர்ந்து அடுத்தகட்டமாக இந்தியாவிலும் ஆடிசன் நடத்த இருக்கிறார்களாம்.