ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவான படம் இந்தியன். ஊழலை மையமாகக்கொண்ட கதையில் உருவான இந்த படத்தில் கமல், அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது. அதன்காரணமாக தற்போது ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைக்கும் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
பல மாதங்களாக ஷங்கர், ரஜினியை வைத்து இயக்கியுள்ள 2.ஓ படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் நிலையில், இந்தியன்-2 படத்தின் கதை விவாதத்தை தாய்லாந்து நாட்டில் நடத்தி ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்டார்.
இந்தியன் 2-விலும் ஊழலைத்தான் பிரதானப்படுத்தியிருக்கிறாராம் ஷங்கர். மக்கள் பணம் அரசியல்வாதிகளால் எந்த மாதிரியெல்லாம் நூதன முறையில் ஊழல் செய்யப்பட்டு வருகிறது என்பதை வெளிச்சம் போடுகிறாராம்.