இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகத்தில் நடைபெறும் பெரும்பாலான படப்பிடிப்புகள் அண்டை மாநிலமான ஐதராபாத் நகரத்தில் தான் நடைபெறுகின்றன. ஒரு காலத்தில் தென்னிந்தியாவின் கனவுலகக் கோட்டையாக சென்னை விளங்கியது. அதன்பின் தெலுங்குப் படங்கள் ஐதராபாத்திற்கும், கன்னடப் படங்கள் பெங்களூரூவுக்கும், மலையாளப் படங்கள் திருவனந்தரபுரத்திற்கும் மாறின. இருந்தாலும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் சென்னையில் உள்ள பிலிம் சிட்டி, ஏவிஎம், பிரசாத் உள்ளிட்ட ஸ்டுடியோக்களில் நடைபெற்றன.
ஏவிஎம் ஸ்டுடியோ ஏறக்குறைய மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. அங்கு மிகப்பெரும் அபார்ட்மென்ட் உருவாகியுள்ளது. பிலிம் சிட்டி, டைடல் பார்க் ஆக மாறியது. பிரசாத் ஸ்டுடியோவில் சில டிவி நிறுவனங்கள் ஆக்கிரமித்துவிட்டன. தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பை சென்னையில் நடத்த முடியாத நிலைதான் தற்போது உள்ளது. ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்றால் தமிழ் தொழிலாளர்கள் பங்கு பெற முடியாது. இருந்தாலும் பல நடிகர்கள் அவர்களது படப்பிடிப்புகளை ஐதராபாத்தில்தான் நடத்துகிறார்கள்.
கமல்ஹாசனின் 'இந்தியன் 2' படப்பிடிப்பும், அஜித்தின் 'விஸ்வாசம்' படப்பிடிப்பும் ஐதராபத்தில் நடைபெற உள்ளது. தமிழ்த் திரையுலகம் தற்போது ஸ்டிரைக்கில் உள்ள நிலையில், தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பை வேறு மாநிலங்களில் நடத்துவதையும் இங்குள்ள தொழிலாளர்கள் எதிர்க்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கம் இதற்கும் முடிவு கட்ட வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.