மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? |
ரகுமான் நடித்த 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அப்படத்தைத் தொடர்ந்து இயக்கியுள்ள படம் 'நரகாசூரன்'. அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஸ்ரேயா, ஆத்மிகா முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை கார்த்திக் நரேனே தயாரித்துள்ளார்.
சிலபல காரணங்களால் நரகாசூரன் படத்தை கௌதம் வாசுதேவ் மேனனும் தயாரித்துள்ளதாக அறிவித்தார்கள். அதுவே இப்போது நரகாசூரன் படத்துக்கு மைனஸாகிவிட்டது.
இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளார்.
இதற்கிடையில் நரகாசூரன் படத்தின் ஓவர்சீஸ் ரைட்ஸை கார்த்திக் நரேனுக்கு தெரியாமல் கௌதம் வாசுதேம் மேனன் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கெளதம் மேனன் மீது அதிருப்தியில் இருக்கிறார் கார்த்திக்.
நரகாசூரன் படத்தின் தயாரிப்பிலிருந்து கௌதம் வாசுதேவ் மேனனை விலக்கிவிட்டு தானே வியாபாரத்தை முடித்து படத்தை வெளியிட கார்த்திக் நரேன் திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.