பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி |
ராம்கோபால்வர்மா இயக்கிய ரக்த சரித்ரா என்ற படத்தில் தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பிறகு தமிழில் பிரகாஷ்ராஜின் தோனி படத்தில் நடித்தார். ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தது அவருக்கு பெரிய அங்கீகாரமாக கிடைத்தது. தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வித்தியாசமான வேடங்களில் நடித்து பெயர் வாங்கி வருகிறார்.
சமீபத்தில் ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்ட ராதிகா ஆப்தேவிடம், டோலிவுட்டில் ஓய்வுபெற வேண்டிய நடிகர், டைரக்டர் யார்? என்றொரு கேள்வி முன் வைக்கப்பட்டபோது, சற்றும் யோசிக்காமல் ராம்கோபால்வர்மா என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் ராதிகா ஆப்தேவை அறிமுகம் செய்ததே ராம் கோபால் வர்மா தான். அவரையே ஓய்வு பெற சொல்லியிருக்கிறார். ராதிகாவின் இந்த பதிலுக்கு என்ன மாதிரியான சர்ச்சை பதிலை அளிக்க போகிறாரோ ராம் கோபால் வர்மா.