அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' |
பெருவாரியான இளவட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள சாய் பல்லவி, எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்தாரோ அதேப்போன்று சமீபகாலமாக கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொண்டு வருகிறார். குறிப்பாக, அவர் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோக்களை மதிப்பதில்லை. உடன் நடிக்கும் நடிகைகளிடம் சரியாக பேச்சுவார்த்தையே வைத்துக் கொள்வதில்லை என்று அவரைப் பற்றி சரமாரியாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்தநேரத்தில், தற்போது அவரை ஆந்திர பிரதேச மாநில அமைச்சர் கன்டா ஸ்ரீனிவாச ராவ்வின் மகனும் நடிகருமான ரவிதேஜாவுடன் இணைத்து டோலிவுட்டில் கிசுகிசுக்கள் பரவிக்கொண்டிருக்கிறது. இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு செம கோபத்தில் இருக்கிறார் சாய் பல்லவி.
இத்தனைக்கும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் கூட நடிக்கவில்லை. இந்த வதந்திக்கு அமைச்சர் கன்டா ஸ்ரீனிவாசராவ்வும் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, இதுபோன்ற செய்திகள், தன் மகனின் வாழ்க்கையை பாதிக்கும் என்றும், இதுபோன்ற வதந்திகளை தவிர்க்கும்படியும் கேட்டு கொண்டுள்ளார்.