ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
விஷால் நடித்த 'துப்பறிவாளன்' படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் புதிய படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக பாக்யராஜின் மகன் சாந்தனு நடிக்க உள்ளார். படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.
'சுட்ட கதை, நளனும் நந்தினியும், நட்புன்னா என்னன்னு தெரியுமா' ஆகிய படங்களைத் தயாரித்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. இயக்குனர் மிஷ்கின், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், சாந்தனு ஆகியோர் உள்ள ஒரு புகைப்படத்தைத் தயாரிப்பாளர் ரவீந்தர் அவருடைய முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ளார். “இன்னும் பலப் பல...ஆச்சரியமான” என அவர் குறிப்பிட்டுள்ளார். அதே புகைப்படத்தை தன் டிவிட்டரில் பகிர்ந்துள்ள சாந்தனு, “என்னுடைய புதிய பிறப்பு, ஆசீர்வதியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சாந்தனு இதுவரை பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் அவருக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடிப்பது உறுதி என்றால் நிச்சயம் அவருக்கும் ஒரு திருப்புமுனை ஏற்படலாம்.