ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள அவருடைய 37வது படம் பற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. 'அயன், மாற்றான்' ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணையும் படம் இது.
கே.வி. ஆனந்த் இதுவரை இயக்கியுள்ள, “கனா கண்டேன், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண்” ஆகிய படங்களில் இரட்டை எழுத்தாளர்களான சுபா முக்கிய பங்காற்றினர். கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றில் படத்திற்குப் படம் அவர்களுடைய பங்கு இருந்தது. நேற்று அறிவிக்கப்பட்ட சூர்யாவின் படத்தில் கே.வி. ஆனந்த், அவர்களை விட்டுவிட்டு பட்டுக்கோட்டை பிரபாகர் பெயரை அவருடைய குழுவினர் பெயரில் சேர்த்திருக்கிறார். அது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
பட்டுக்கோட்டை பிரபாகர் பல நாவல்களை எழுதியுள்ள ஒரு எழுத்தாளர், பல படங்களுக்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இவர் எழுதிய ஒரு அரசியல், ஆக்ஷன் கதையைத்தான் கே.வி. ஆனந்த், சூர்யாவின் 37வது படமாக இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதனால்தான், இந்தப் படத்தில் அவருடைய ஆஸ்தான எழுத்தாளர்களான சுபாவை கே.வி. ஆனந்த் இணைத்துக் கொள்ளவில்லை என்கிறார்கள்.
பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய எந்த நாவல் படமாக உள்ளது என்பது விரைவில் தெரிய வரலாம்.