இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதை வெளிப்படையாக கூறிவரும் நடிகைகளில் இலியானாவும் ஒருவர்.
இதுகுறித்து அவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளது. ஆனால் இதை வெளியில் சொன்னால் தங்களது கேரியர் போய் விடுமோ என்று யாரும் வெளியில் சொல்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு கோழைத்தனமான செயல்.
மேலும், பெரிய நடிகர்களுக்கு வெளியில் கடவுள் போன்றொரு பெரிய இமேஜ் இருந்து வருகிறது. ஆனால் அந்த நடிகர்களுக்கு ஒரு நிஜமுகம் உள்ளது. அந்த முகம் மக்களுக்குத் தெரியாது. எங்களைப்போன்ற நடிகைகளுக்குத்தான் தெரியும். அதனால் அவர்களின் முகத்திரையை கிழித்தெறிய அனைத்து நடிகைகளும் ஒன்று சேர வேண்டும் என்கிறார் இலியானா.