அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதை வெளிப்படையாக கூறிவரும் நடிகைகளில் இலியானாவும் ஒருவர்.
இதுகுறித்து அவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில், சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் உள்ளது. ஆனால் இதை வெளியில் சொன்னால் தங்களது கேரியர் போய் விடுமோ என்று யாரும் வெளியில் சொல்வதில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஒரு கோழைத்தனமான செயல்.
மேலும், பெரிய நடிகர்களுக்கு வெளியில் கடவுள் போன்றொரு பெரிய இமேஜ் இருந்து வருகிறது. ஆனால் அந்த நடிகர்களுக்கு ஒரு நிஜமுகம் உள்ளது. அந்த முகம் மக்களுக்குத் தெரியாது. எங்களைப்போன்ற நடிகைகளுக்குத்தான் தெரியும். அதனால் அவர்களின் முகத்திரையை கிழித்தெறிய அனைத்து நடிகைகளும் ஒன்று சேர வேண்டும் என்கிறார் இலியானா.