ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன்-சூரியின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க் அவுட்டானதைத் தொடர்ந்து அந்த படங்களை இயக்கிய பொன்ராம், தற்போது தான் இயக்கி வரும் சீமராஜா படத்திலும் அவர்களை இணைத்திருக்கிறார்.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றது. அதற்காக கிராமத்து செட் அமைத்து படமாக்கினார். மேலும், அங்கு மாதக்கணக்கில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் சிவகார்த்திகேயன்-சூரி இருவரும் கிரிக்கெட் டீம் உருவாக்கி விளையாடி வந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஒரு அணியாகவும், சூரி இன்னொரு அணியாகவும் விளையாடி வந்த இந்த கிரிக்கெட் விளையாட்டில் சீமராஜா படக்குழுவில் உள்ள பலரும் கலந்து கொண்டனர். ஆனால் சமந்தா கலந்து கொள்ளவில்லையாம். தனக்கு கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இல்லை என்று சொல்லிக்கொண்டு அவர்கள் விளையாடுவதை அவர் வேடிக்கை மட்டுமே பார்த்தாராம்.