'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன்-சூரியின் காமெடி கூட்டணி பெரிய அளவில் ஒர்க் அவுட்டானதைத் தொடர்ந்து அந்த படங்களை இயக்கிய பொன்ராம், தற்போது தான் இயக்கி வரும் சீமராஜா படத்திலும் அவர்களை இணைத்திருக்கிறார்.
கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்றது. அதற்காக கிராமத்து செட் அமைத்து படமாக்கினார். மேலும், அங்கு மாதக்கணக்கில் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டதால், தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் சிவகார்த்திகேயன்-சூரி இருவரும் கிரிக்கெட் டீம் உருவாக்கி விளையாடி வந்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஒரு அணியாகவும், சூரி இன்னொரு அணியாகவும் விளையாடி வந்த இந்த கிரிக்கெட் விளையாட்டில் சீமராஜா படக்குழுவில் உள்ள பலரும் கலந்து கொண்டனர். ஆனால் சமந்தா கலந்து கொள்ளவில்லையாம். தனக்கு கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் இல்லை என்று சொல்லிக்கொண்டு அவர்கள் விளையாடுவதை அவர் வேடிக்கை மட்டுமே பார்த்தாராம்.