‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
“அவரா, அவரை வைத்து படத்தை நினைத்தபடி எடுக்க முடியாது” என திரையுலகத்திலேயே பலரும் பேசுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஹீரோவாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியவர் சிம்பு.
ஆனால், அவரிடம் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றம்தான் திரையுலகத்தில் பலரையும் நம்ப வைக்க மறுக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்று செய்தி வந்த போதே பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். சொந்தப் படத்திற்கே சரியாக வராத சிம்பு எப்படி மணிரத்னம் படத்தில் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் சந்தேகம் கிளப்பினார்கள். ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மணிரத்னத்திற்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சிம்பு.
அனைவருக்கும் முன்பாகவே படப்பிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு முன்பாகவே செல்கிறாராம். சிம்புவைப் பற்றி என்னவெல்லாமோ சொன்னார்களே, இப்போது இப்படி அநியாயத்திற்கு மாறிவிட்டாரே என மணிரத்னமே அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.
மணிரத்னம் படத்தில் சிம்பு முதன்முறையாக நடிக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில்தான் இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மாறிய சிம்பு எப்போதோ மாறியிருந்தால் உண்மையிலேயே இப்போது லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆகவே மாறியிருப்பாரே என அங்கலாய்க்கிறது கோலிவுட்.