பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
“அவரா, அவரை வைத்து படத்தை நினைத்தபடி எடுக்க முடியாது” என திரையுலகத்திலேயே பலரும் பேசுவார்கள். அப்படிப்பட்ட ஒரு ஹீரோவாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியவர் சிம்பு.
ஆனால், அவரிடம் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றம்தான் திரையுலகத்தில் பலரையும் நம்ப வைக்க மறுக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கப் போகிறார் என்று செய்தி வந்த போதே பலரும் அதிர்ச்சியடைந்தார்கள். சொந்தப் படத்திற்கே சரியாக வராத சிம்பு எப்படி மணிரத்னம் படத்தில் நடிக்கப் போகிறார் என்றெல்லாம் சந்தேகம் கிளப்பினார்கள். ஆனால், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மணிரத்னத்திற்கே அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் சிம்பு.
அனைவருக்கும் முன்பாகவே படப்பிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு முன்பாகவே செல்கிறாராம். சிம்புவைப் பற்றி என்னவெல்லாமோ சொன்னார்களே, இப்போது இப்படி அநியாயத்திற்கு மாறிவிட்டாரே என மணிரத்னமே அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.
மணிரத்னம் படத்தில் சிம்பு முதன்முறையாக நடிக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில்தான் இப்படி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இப்போது மாறிய சிம்பு எப்போதோ மாறியிருந்தால் உண்மையிலேயே இப்போது லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆகவே மாறியிருப்பாரே என அங்கலாய்க்கிறது கோலிவுட்.