இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில், விசுவாசம் என்ற படத்தில் நடிக்கிறார் அஜித். சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரிக்கிறார். அஜித்துடன் நயன்தாரா, யோகி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. ஆனால் தமிழ் திரையுலகம் ஸ்டிரைக்கால் இப்படம் துவங்குவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.
இதனிடையே, அஜித்தின் அடுத்தப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் படங்களின் இயக்குநர் வினோத் இயக்குவதாக தகவல் வெளியான நிலையில் இந்தப்படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித், ஸ்ரீதேவி இடையே நல்ல நட்பு இருந்தது. அதனால் தான் ஸ்ரீதேவியின் ரீ-என்ட்ரி படமான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் ஸ்ரீதேவி கேட்டு கொண்டதால் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் அஜித். அந்த நட்பின் அடையாளமாக போனி கபூரின் தயாரிப்பில் அஜித் நடிக்க சம்மதம் சொல்லியிருப்பதாக தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீதேவியின் அஞ்சலி கூட்டம் சென்னையில் நடந்தது. அஜித், ஷாலினி இருவரும் போனி கபூர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அந்த சந்திப்பின் போதே, அஜித்தின் படம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.