பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகையில், சினிமாவில் இருக்கும் பிரபலங்களும் பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகைகள் அமலாபால், சனுஷா போன்றவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தானும் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பதிவில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன். இதை நான் இன்ஸ்டிராகிராமில் பகிர்ந்த போது அதிர்ச்சியாக இருந்தது. பல ஆண்களும், பெண்களும் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை பகிர்ந்தார்கள்.
இதில் பெரும்பாலும் குடும்ப உறவுகளாலும், பயணங்களிலும், நெருங்கிய நண்பர்களும் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது பெரும்பாலும் அதை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.
குறிப்பாக பெண்கள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல பயப்படுகிறார்கள். இதனால் படிப்பதையோ, வேலைக்கு போவதையோ நிறுத்தி விடுவார்களோ என அஞ்சுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.