துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகையில், சினிமாவில் இருக்கும் பிரபலங்களும் பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகைகள் அமலாபால், சனுஷா போன்றவர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானார்கள்.
இந்நிலையில், பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தானும் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். அவர் தன் டுவிட்டர் பதிவில், பொது நிகழ்ச்சி ஒன்றில் பாலியல் சீண்டலுக்கு உள்ளானேன். இதை நான் இன்ஸ்டிராகிராமில் பகிர்ந்த போது அதிர்ச்சியாக இருந்தது. பல ஆண்களும், பெண்களும் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதை பகிர்ந்தார்கள்.
இதில் பெரும்பாலும் குடும்ப உறவுகளாலும், பயணங்களிலும், நெருங்கிய நண்பர்களும் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது பெரும்பாலும் அதை வெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.
குறிப்பாக பெண்கள் தங்கள் பெற்றோர்களிடம் சொல்ல பயப்படுகிறார்கள். இதனால் படிப்பதையோ, வேலைக்கு போவதையோ நிறுத்தி விடுவார்களோ என அஞ்சுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்.