‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ஹன்சிகா. ரஜினி, கமல், அஜித் தவிர தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். சமீபகாலமாக ஹன்சிகாவிற்கு சினிமா வாய்ப்பு குறைந்துள்ளது. தற்போது, அதர்வாவுடன் ஒரு படத்திலும், விக்ரம் பிரபு உடன் துப்பாக்கி முனை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சங்கத்தில் ஹன்சிகா மீது அவரது மேலாளர் முனுசாமி என்பவர் புகார் அளித்துள்ளார். அதில் தான் இதுநாள் வரை அவருடன் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா வழங்கவில்லை என்றும், அதை பெற்று தரும்படியும் முறையிட்டுள்ளார்.