தக் லைப் படத்தின் மூலம் இணையும் சிம்பு, துல்கர் சல்மான், ஜெயம் ரவி | ரீ-ரிலீஸ் ஆகும் ராவணன் | ரஜினி மகளாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் | புதிய சீரியல் இயக்கும் திருமுருகன் | ரூ.50 கோடி வசூலை கடந்த பஹத் பாசிலின் ஆவேசம் | தொடர்ந்து காமெடி படங்களில் நடிக்கும் பஹத் பாசில் | மம்முட்டியின் டர்போ ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஸ்ரீவள்ளி 2.0 ஆக என்னை பார்ப்பீர்கள் : ராஷ்மிகா நம்பிக்கை | ஜூனியர் என்டிஆரின் ஜிம் மேட்டாக மாறிய ஊர்வசி ரவுட்டேலா | ஜெகபதி பாபுவிற்கு சல்மான்கான் சொன்ன அட்வைஸ் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன். தற்போது சீமராஜா, ரவிக்குமார் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், நடிகர் ஆரி ஏற்பாடு செய்திருந்த விவசாயம் சார்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார் சிவகார்த்திகேயன்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், என்னுடைய மகளுக்கு இதுவரை பீட்சா, பர்கர் போன்ற உணவுகளை வழங்கியது இல்லை. அப்படியிருக்கையில் நான் எப்படி அந்த மாதிரியான விளம்பர படங்களில் நடிக்க முடியும். இங்கே சொன்ன விஷயங்களை பார்க்கும் போது எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. தற்போது என் வீட்டில் கொய்யா, சப்போட்டோ போன்ற மரங்களை வளர்த்து வருகிறேன். எதிர்காலத்தில் இதை விட இன்னும் பெரிதாக விவசாயம் செய்ய ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.