ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா மானசா. அந்தப்படம் வெற்றி பெறாததால் அடுத்தபடியாக அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை. அதனால் சிலமாத முயற்சிக்குப் பிறகு விஜய் டிவியில் தயாராக இருந்த ராஜா ராணி சீரியலில் நடிக்க அழைப்பு வர அதில் செம்பா என்ற கேரக்டரில் நடிக்கத் தொடங்கினார்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ஆலியா மானசா நடித்த அந்த வேடம் இப்போது அவரை பெரிய அளவில் பேச வைத்துள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு சினிமாவில் இருந்தும் சில வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத ஆலியா மானசா, ஜூலியும் 4 பேரும் படத்திற்கு பிறகு சினிமாவில் சான்ஸ் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் உயரத்தை குறிப்பிட்டு வாய்ப்பு தர மறுத்தார்கள், அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை குறைந்து விட்டது.
அதேசமயம், சின்னத்திரை என்னை கொண்டாடுகிறது. சின்னத்திரையாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை ரொம்ப பெரிய திரையாகவே கருதுகிறேன். தொடர்ந்து சின்னத்திரையில் நீடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் ஆலியா மானசா.