கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஜூலியும் நான்கு பேரும் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஆலியா மானசா. அந்தப்படம் வெற்றி பெறாததால் அடுத்தபடியாக அவருக்கு படங்கள் கிடைக்கவில்லை. அதனால் சிலமாத முயற்சிக்குப் பிறகு விஜய் டிவியில் தயாராக இருந்த ராஜா ராணி சீரியலில் நடிக்க அழைப்பு வர அதில் செம்பா என்ற கேரக்டரில் நடிக்கத் தொடங்கினார்.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ஆலியா மானசா நடித்த அந்த வேடம் இப்போது அவரை பெரிய அளவில் பேச வைத்துள்ளது. இந்த நேரத்தில் அவருக்கு சினிமாவில் இருந்தும் சில வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், அந்த வாய்ப்புகளை ஏற்றுக் கொள்ளாத ஆலியா மானசா, ஜூலியும் 4 பேரும் படத்திற்கு பிறகு சினிமாவில் சான்ஸ் கேட்டு சென்ற இடங்களில் எல்லாம் உயரத்தை குறிப்பிட்டு வாய்ப்பு தர மறுத்தார்கள், அதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை குறைந்து விட்டது.
அதேசமயம், சின்னத்திரை என்னை கொண்டாடுகிறது. சின்னத்திரையாக இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை ரொம்ப பெரிய திரையாகவே கருதுகிறேன். தொடர்ந்து சின்னத்திரையில் நீடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் ஆலியா மானசா.