புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
அஜித்தின் தீவிரமான ரசிகராக இருந்து வருபவர் சிம்பு. அவரின் படம் ரிலீஸாகும் போது முதல்நாள், முதல் ஷோவை எப்படியாவது பார்த்து விடக்கூடியவர். வாலு படம் வெளியாவதில் பிரச்னை எழுந்தபோது, சிம்புவுக்கு உதவ முன் வந்தார் விஜய். மேலும் அஜித் பற்றி தன் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட அதுவே அவருக்கு வம்பான நிகழ்வும் நடந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிம்பு. அப்போது அவர் பேசும்போது, நான் எப்போதுமே மனசுல பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுவேன். அதற்கு காரணம் அஜித் தான். அவரிடமிருந்து தான் இதை கற்றுக்கொண்டேன் என்றார்.
ரஜினி, விஜய்யும் என்னைக்கவர்ந்த நடிகர்கள். அவர்களை எனது முன்னோடிகளாக கருதுகிறேன். இருவருமே கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். அதோடு, நான் கஷ்டப்படும்போது எனக்கு உதவி செய்த தமிழரான விஜய்யின் தம்பியாக இருப்பதில் எப்போதுமே நான் பெருமைப்படுகிறேன் என்றார் சிம்பு.