ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித்தின் தீவிரமான ரசிகராக இருந்து வருபவர் சிம்பு. அவரின் படம் ரிலீஸாகும் போது முதல்நாள், முதல் ஷோவை எப்படியாவது பார்த்து விடக்கூடியவர். வாலு படம் வெளியாவதில் பிரச்னை எழுந்தபோது, சிம்புவுக்கு உதவ முன் வந்தார் விஜய். மேலும் அஜித் பற்றி தன் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட அதுவே அவருக்கு வம்பான நிகழ்வும் நடந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிம்பு. அப்போது அவர் பேசும்போது, நான் எப்போதுமே மனசுல பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுவேன். அதற்கு காரணம் அஜித் தான். அவரிடமிருந்து தான் இதை கற்றுக்கொண்டேன் என்றார்.
ரஜினி, விஜய்யும் என்னைக்கவர்ந்த நடிகர்கள். அவர்களை எனது முன்னோடிகளாக கருதுகிறேன். இருவருமே கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். அதோடு, நான் கஷ்டப்படும்போது எனக்கு உதவி செய்த தமிழரான விஜய்யின் தம்பியாக இருப்பதில் எப்போதுமே நான் பெருமைப்படுகிறேன் என்றார் சிம்பு.