'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித்தின் தீவிரமான ரசிகராக இருந்து வருபவர் சிம்பு. அவரின் படம் ரிலீஸாகும் போது முதல்நாள், முதல் ஷோவை எப்படியாவது பார்த்து விடக்கூடியவர். வாலு படம் வெளியாவதில் பிரச்னை எழுந்தபோது, சிம்புவுக்கு உதவ முன் வந்தார் விஜய். மேலும் அஜித் பற்றி தன் டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட அதுவே அவருக்கு வம்பான நிகழ்வும் நடந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சிம்பு. அப்போது அவர் பேசும்போது, நான் எப்போதுமே மனசுல பட்டதை வெளிப்படையாக தைரியமாக பேசுவேன். அதற்கு காரணம் அஜித் தான். அவரிடமிருந்து தான் இதை கற்றுக்கொண்டேன் என்றார்.
ரஜினி, விஜய்யும் என்னைக்கவர்ந்த நடிகர்கள். அவர்களை எனது முன்னோடிகளாக கருதுகிறேன். இருவருமே கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தவர்கள். அதோடு, நான் கஷ்டப்படும்போது எனக்கு உதவி செய்த தமிழரான விஜய்யின் தம்பியாக இருப்பதில் எப்போதுமே நான் பெருமைப்படுகிறேன் என்றார் சிம்பு.