ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னை: திட்டமிட்டபடி 16ம் தேதி முதல் ஸ்டிரைக் நடைபெறும் என தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், ‛டிஜிட்டல் நிறுவன கட்டண பிரச்னை, சினிமா டிக்கெட் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்த ஸ்டிரைக், திட்டமிட்டபடி 16ம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளிலும் வெளி மாநிலங்களிலும் நடக்கும் படப்பிடிப்புகள் 23ம் தேதி முதல் நிறுத்தப்படுவதாகவும் இந்த போராட்டத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை காலவரையறை இன்றி நடக்கவிருப்பதாகவும் அறிவித்தார். இக்கூட்டத்தில் செயலாளர்கள் கதிரேசன் , துரைராஜ் , பொருளாளர் S.R. பிரபு , முன்னாள் நிர்வாகிகள் தாணு , S.A.சந்திரசேகர் , R.K.செல்வமணி , T.சிவா , எடிட்டர் மோகன் , A.L. அழகப்பன் , K.ராஜன் , TG தியாகராஜன் ,
மற்றும் தயாரிப்பாளர்கள் சுந்தர்.C , பாண்டிராஜ் , மைகேல் ராயப்பன் , தங்கர்பச்சன் , R.D.ராஜா , A.L. உதயா ,கபார் , P.L. தேனப்பன் , அருண்விஜய் , S.மதன் , வெங்கட் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உடல் நிலையில் சரியில்லாததால் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.