டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வில்லன் நடிகரான பாபி சிம்ஹாவுக்கு சினிமாவில் சீக்கிரமே வெற்றி கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேசிய விருதும் கிடைத்தது. எல்லாமே குறுகிய காலத்திலேயே கிடைத்தது. அதன்பின்னர் சறுக்கல்களும் ஏற்பட்டது.
ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையிலேயே மீண்டும் வில்லனாக நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பாபி சிம்ஹா. கருப்பன் படத்தில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சாமி 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். 'கம்மர சம்பவம்' என்ற மலையாளப் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது புதிதாக வெப் சீரியல் ஒன்றிலும் நடிக்கிறார். 'ஜிகர்தண்டா' படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டராம் அவருக்கு. 'சவாரி' படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இந்த வெப் சீரியலை இயக்குகிறார். 'சவாரி' படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் சீரியல் இது. பிளாக் ஹியூமர் நிறைந்த சீரியலாக இது தயாராகிறது.
பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்த வெப் சீரியலை தயாரிக்கின்றனர்.