தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வில்லன் நடிகரான பாபி சிம்ஹாவுக்கு சினிமாவில் சீக்கிரமே வெற்றி கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேசிய விருதும் கிடைத்தது. எல்லாமே குறுகிய காலத்திலேயே கிடைத்தது. அதன்பின்னர் சறுக்கல்களும் ஏற்பட்டது.
ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையிலேயே மீண்டும் வில்லனாக நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பாபி சிம்ஹா. கருப்பன் படத்தில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சாமி 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். 'கம்மர சம்பவம்' என்ற மலையாளப் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது புதிதாக வெப் சீரியல் ஒன்றிலும் நடிக்கிறார். 'ஜிகர்தண்டா' படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டராம் அவருக்கு. 'சவாரி' படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இந்த வெப் சீரியலை இயக்குகிறார். 'சவாரி' படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் சீரியல் இது. பிளாக் ஹியூமர் நிறைந்த சீரியலாக இது தயாராகிறது.
பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்த வெப் சீரியலை தயாரிக்கின்றனர்.