ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வில்லன் நடிகரான பாபி சிம்ஹாவுக்கு சினிமாவில் சீக்கிரமே வெற்றி கிடைத்தது. அதுமட்டுமல்ல, தேசிய விருதும் கிடைத்தது. எல்லாமே குறுகிய காலத்திலேயே கிடைத்தது. அதன்பின்னர் சறுக்கல்களும் ஏற்பட்டது.
ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்த நிலையிலேயே மீண்டும் வில்லனாக நடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார் பாபி சிம்ஹா. கருப்பன் படத்தில் வில்லனாக நடித்தவர் தற்போது ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'சாமி 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். 'கம்மர சம்பவம்' என்ற மலையாளப் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது புதிதாக வெப் சீரியல் ஒன்றிலும் நடிக்கிறார். 'ஜிகர்தண்டா' படத்தைப் போல பயங்கர வில்லன் கேரக்டராம் அவருக்கு. 'சவாரி' படத்தை இயக்கிய குகன் சென்னியப்பன் இந்த வெப் சீரியலை இயக்குகிறார். 'சவாரி' படத்துக்குப் பிறகு அவர் இயக்கும் சீரியல் இது. பிளாக் ஹியூமர் நிறைந்த சீரியலாக இது தயாராகிறது.
பாபி சிம்ஹா ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்த வெப் சீரியலை தயாரிக்கின்றனர்.