டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகத்தில் அடுத்தடுத்த போராட்டங்களால் மிகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிய படங்கள் வெளிவராததால் வசூல் பார்க்க முடியாமல் தயாரிப்பாளர்களும், படங்களை பார்க்க முடியாததால் பொழுதுபோக்க முடியாமல் ரசிகர்களும் தவித்து வருகிறார்கள்.
இந்த போராட்ட சமயத்தில் எந்தத் தயாரிப்பாளரும் எந்த ஒரு விழாவையும் நடத்தக் கூடாது என தயாரிப்பாளர்களுக்கு வாய் மொழி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதையும் மீறி ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளரான கே.ஈ.ஞானவேல்ராஜா நோட்டா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பை கடந்த வாரம் நடத்தினார். அதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அவருக்கு ரெட் போடப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன.
விழா நடத்தியது குறித்து தயாரிப்பாளர் சங்கம் கேட்ட விளக்கத்திற்கு கே.ஈ.ஞானவேல்ராஜா பதிலளித்துவிட்டதாகவும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டதன் பேரில் ஞானவேல்ராஜாவும் நோட்டா படப்பிடிப்பைத் தள்ளி வைத்துவிட்டாராம்.